சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் சட்டமன்ற குழு தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.