புதுதில்லி
ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி தொடர்வதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.