தற்போதைய செய்திகள்
புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வர்தா புயலை முன்னிட்டு புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
வர்தா புயலை முன்னிட்டு புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் எதிரொலியாக கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
இதன் எதிரொலியாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.