ஐதராபாத்தில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.
ஐதராபாத் அருகே நானக்ராம்குண்டாவில் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம் வியாழக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐதராபாத் காவல்துறை ஆணையர் ஜானார்த்தனரெட்டி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கட்டட விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.