திருமலையில் ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலையில், 5 நாட்கள் தேவஸ்தானம், ஆர்ஜித சேவையை ரத்து செய்துள்ளது.

திருமலையில், 5 நாட்கள் தேவஸ்தானம், ஆர்ஜித சேவையை ரத்து செய்துள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியின் போது, பக்தர்கள் அதிக அளவில் வருவர்.

அதனால் தேவஸ்தானம் வரும் டிச.31ம் தேதி மற்றும் 2017ம் ஆண்டு ஜனவரி 1, 7, 8 மற்றும் 9ம்(8,9 வைகுண்ட ஏகாதசி) தேதிகளில், ஆர்ஜித சேவை, வி.ஐ.பி பிரேக் தரிசனங்களை ரத்து செய்துள்ளது.

ஜனவரி 1, 7, 8ம் தேதிகளில், சுப்ரபாதம், அர்ச்சனா, தோமாலை உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும், என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com