திருமலையில், 5 நாட்கள் தேவஸ்தானம், ஆர்ஜித சேவையை ரத்து செய்துள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியின் போது, பக்தர்கள் அதிக அளவில் வருவர்.
அதனால் தேவஸ்தானம் வரும் டிச.31ம் தேதி மற்றும் 2017ம் ஆண்டு ஜனவரி 1, 7, 8 மற்றும் 9ம்(8,9 வைகுண்ட ஏகாதசி) தேதிகளில், ஆர்ஜித சேவை, வி.ஐ.பி பிரேக் தரிசனங்களை ரத்து செய்துள்ளது.
ஜனவரி 1, 7, 8ம் தேதிகளில், சுப்ரபாதம், அர்ச்சனா, தோமாலை உள்ளிட்ட சேவைகள், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும், என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.