சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவூல் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவூல் பல இன்னல்களை தாண்டி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா சிறு வயது முதலே பல துறைகளில் சிறந்து விளங்கியவர் அவர் என்று புகழாரம் சூட்டினார்.