புதுதில்லி
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் கூறியிருப்பதாவது: -2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம்,மராத்தி தெலுங்கு மொழிகளில் நடத்தப்படும்.
இந்த நீட் தேர்வினால் மாநிலங்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். மேலும் மருத்துவ இளம், முதுகளைப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.