சென்னை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள், எடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோரும் மெரினா கடற்கரையில் உள்ள மறந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வின் போது முதல்வர் பன்னீர் செல்வம் , ஜே., தோழி சசிகலா ஆகியோர் முதல்வரின் நினைவிட கட்டடம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.