ராகுல் காந்தி ஒரு கழுதை: காங்கிரஸிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ அதிரடி தாக்கு!

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஆர்.கே. ராய். காங்கிரஸ் கட்சி
ராகுல் காந்தி ஒரு கழுதை: காங்கிரஸிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ அதிரடி தாக்கு!

 தாக்கு!ராய்பூர்: கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஆர்.கே. ராய். காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தியை கழுதை என்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆர்.கே.ராய். இவர் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் ஜோகிக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் ஆர்.கே.ராய் இடைநீக்கம் செய்ய வேண்டும் என "ஒருங்கிணைப்புக் குழு" உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ராய் இடைநீக்கம் செய்யப்படுவதாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹரிபிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை வரவேற்றுள்ள ஆர்.கே.ராய், ஏற்கனவே ஒரு முறை ராகுல் காந்திக்கு எதிராக விமர்சனம் செய்ததற்காகவே தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதற்காக கழுதையை, குதிரை என்று கூற முடியாது என்றும், அப்படி அவர்கள் நினைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு பார்வை தெரியவில்லை. இல்லையெனில் பார்வை தெரியாதது போல் அந்த கட்சி நடிக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியின் துணைத்தலைவரை தரக்குறைவான வார்த்தைகளால் எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளது கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com