காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு: என்.ஆர். காங். வலியுறுத்தல்

புதுச்சேரியில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கதிர்காமம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜே.ஜெயபால் வெளியி

புதுச்சேரி, 

புதுச்சேரியில் காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக கதிர்காமம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜே.ஜெயபால் வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் மருத்துவம், பொறியியல் பாட பிரிவுகளுக்கு சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் சென்டாக் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான இறுதி கலந்தாய்வு முடிந்த நிலையில் புதுச்சேரி பொறியியல் கல்லூரி, காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரிகளில் 145 இடங்கள் காலியாக உள்ளன.

மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. எம்சிஐ விதிகளின் படி கலந்தாய்வு தேதி முடிவுற்றாலும், பிற மாநிலங்கள் எம்சிஐ அனுமதி பெற்று கலந்தாய்வை நடத்தி உள்ளன.

புதுச்சேரி அரசு உரிய நேரத்தில் இதைச் செய்யத்தவறி விட்டது. எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் எம்சிஐ அனுமதியுடன் 117 இடங்களுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும்.

மேலும் பொறியியலில் காலியாக உள்ள இடங்களுக்கும் மறுகலந்தாய்வை நடத்த வேண்டும் என்றார் ஜெயபால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com