புதுச்சேரி,
கூடங்குளத்தில் மேலும் அணு உலைகள் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து புதுச்சேரி இந்திய சமூகச் செயற்பாட்டு பேரவை மற்றும் மனித உரிமைகள்ம ற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் சார்பில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அணு உலைகளில் உற்பத்தியாகும் அணு கழிவுகள் பாதுகாப்பாகபல 100 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும், அதற்கு உத்திரவாகம் இல்லை. அணு உலைகளில் ஏற்படும் விபத்துகளினால் கதிரியக்கம் வெளிப்பட்டு மனித குலத்திற்கும், சுற்றுச்சூ ழலுக்கும் அழிவை ஏற்படுத்தும்.
அணு உலைகள்க டலோரங்களில் அமைக்கப்படுவதால் மீனவர்களின் தொழில் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதியதாக அணு உலைகள் அடிக்கல் நாட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பூவுலகின் நண்பர்கள் மாநில அமைப்பாளர் சீனு தமிழ்மணி தலைமை தாங்கினார்.