திருப்பதி,
திருமலையில் பாட்டரியால் இயங்கும் பேருந்தை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் சுற்றுப்புற சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க தேவஸ்தானம் பாட்டரியால் இயங்கும் பேருந்தை இயக்க உள்ளது.
அதில் முதற்கட்டமாக 2 பேருந்துகளை சோதனை ஓட்டமாக இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் விரைவில் திருமலையில் பாட்டரியால் இயங்கும் பேருந்துகளை மட்டும் இயக்க உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார்.