எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்த ஜப்பான் பெண்மணி ஜுங்கோ தாபேய்(77) புற்றுநோயால் வியாழக்கிழமை காலமானார்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தனது குழுவினருடன் கடந்த 1975-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி அடைந்த தாபேய், உலகின் உயரமான சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.
எவரெஸ்ட் சிகரத்தோடு தனது மலையேற்ற பயணத்தை முடித்துக் கொள்ளாத தாபேய், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான சிகரங்களை அடைந்து 1992-ஆம் ஆண்டு சாதனை வரலாற்றில் இடம்பிடித்தார்.
தனது வாழ்வின் பெரும்பகுதியை மலையேற்றத்துக்காகவே செலவிட்ட தாபேய், உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மலைச் சிகரங்களில் ஏறியுள்ளார். ஜப்பானின் விவசாயக் குடும்பத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்த தாபேயின் மலையேற்ற பயணம் 4 வயதிலேயே தொடங்கியது. தனது ஆசிரியருடன் நாசு மலைச் சிகரத்தில் அவர் முதன்முறையாக ஏறினார்.
அவர் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மலையேற்ற ஏறும் பயணத்தை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.