திருச்செந்தூரில் அக்டோபர் 31-ல் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்: -நவம்பர் 5-ல் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வருகின்ற அக்டோபர் 31-ம் தேதியன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வருகின்ற அக்டோபர் 31-ம் தேதியன்று யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரசதித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நிகழாண்டில் அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி, நவம்பர் 5-ம் தேதி சனிக்கிழமையன்று சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.  விழாவை முன்னிட்டு முதல் நாளான அக்டோபர் 31-ம் தேதியன்று அதிகாலை 1 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும், காலை 6 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படும் நிகழ்ச்சியும்,  தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை திருக்கோவில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நவம்பர் 5-ம் தேதி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1.00 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

நவம்பர் 6-ம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. திருவிழாக்காலங்களில் நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் திருக்கோவில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் வைத்து பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com