ஆந்திர - ஒடிஸா எல்லையில் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு

ஆந்திர - ஒடிஸா மாநில எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திர - ஒடிஸா மாநில எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. 

ஆந்திரா - ஒடிஷா மாநில எல்லைப் பகுதியில் திங்கட்கிழமை பதுங்கி இருந்த 7 பெண்கள் உட்பட 24 மாவோயிஸ்டுகள் ஆயுதப்படை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்த இடத்திலிருந்து ஏ.கே.47 ரகத்தைச் சேர்ந்த 4 இயந்திரத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் இன்று இதே பகுதியில் ஆந்திர, ஒடிஸா போலீசார் மீண்டும் நடத்திய தேடுதல் வேட்டையின் போது மேலும் மூவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com