கென்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
கென்யாவின் வடக்கிழக்கு பகுதியில் உள்ள மண்டேரா நகரில் விருந்தினர் விடுதி மீது பயங்கரவாதிகள் இன்று அதிகாலை வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண் உட்பட 12 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கட்டிட இடிப்பாடுகளிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.