மதுரையில்  கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

மதுரையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றதாக திங்கள்கிழமை புகார்  செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரையில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றதாக திங்கள்கிழமை புகார்  செய்யப்பட்டுள்ளது.

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூர் மடத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கலைவாணி(36). தீபாவளியை முன்னிட்டு ஜவுளி எடுப்பதற்காக கணவன், மனைவி இருவரும் திங்கள்கிழமை மதுரை வந்துள்ளனர்.

ஜவுளி எடுத்துவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்றுள்ளனர். விரகனூர் அருகே கட்டுமானக் கலவை  நிறுவனம் அருகே சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனராம். 

சம்பவம் தொடர்பாக கலைவாணி அளித்தப் புகாரின்பேரில் சிலைமான் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரிóத்து வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com