தனியார் துறையை சேர்ந்த ஹெச்டிஎப்சி வங்கி, அதன் செப்டம்பர் காலாண்டின் முடிவில் நிகர லாபம் 20% உயர்வுடன் உள்ளதாகக் கூறியுள்ளது.
நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கி, கடந்த ஜூலை தொடங்கி, செப்டம்பர் வரையான காலாண்டுச் செயல்பாடுகள் தொடர்பான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி செப்டம்பர் காலாண்டில், திரட்டப்பட்ட டெபாசிட்களின் மதிப்பு 17% வளர்ச்சியுடன், ரூ.5,91,731 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட கடன்தொகையின் மதிப்பு 18.1% அதிகரித்து ரூ.4,94,418 கோடி என்றும், நிகர லாபம் 20% உயர்ந்து, ரூ.3,455 கோடியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.
வங்கியின் நிகர வட்டி வருமானம் 19.7% அதிகரித்து, ரூ.7,994 கோடியாகவும், நிகர வருமானம் 18% உயர்வுடன் ரூ.9,233 கோடியாகவும் உள்ளதென்று, ஹெச்டிஎப்சி வங்கி குறிப்பிட்டுள்ளது.