கும்பகோணத்தில் ஜவுளிக்கடையில் தீ விபத்து

கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com