திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர்

திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று காலை ஏர் ஏசியா விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் வருவாய் புலனாய்வு, சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் உடமைகளை சோதனையிட்டபோது, ரூ.45 லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் டார்ச் லைட்டில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் வான் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com