சென்னை,
தீபாவளியையொட்டி, ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- மகிழ்ச்சி மற்றும் வளத்தின் ஒளியைக் குறிப்பதாகும் தீபாவளி. இந்த நன்னாள், அனைவரும் ஒருங்கிணைந்து ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கட்டும்.
தெய்வீக ஒளியானது மக்களின் மனதில் அறியாமை எனும் இருளை நீக்கி, அனைவருக்கும் வெற்றி, ஒற்றுமை, நல்ல உடல்நலம், வாழ்வில் முன்னேற்றத்தை அளிக்கட்டும்.
அனைவருக்கும் இதயம் கனிந்த பசுமை நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் என்றார்.