ஜம்மு உள்ளிட்ட 5 இடங்களில் புதிய எஃப்.எம். வானொலி தொடங்க சன்குழுமத்திற்கு அனுமதி

​கலாநிதி மாறனின் சன் குழுமம் சார்பில் சூரியன் ஃஎப் எம். மற்றும் ரெட் ஃஎப்.எம் என நாட்டின் பல்வேறு இடங்களில் வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
ஜம்மு உள்ளிட்ட 5 இடங்களில் புதிய எஃப்.எம். வானொலி தொடங்க சன்குழுமத்திற்கு அனுமதி

புதுதில்லி

கலாநிதி மாறனின் சன் குழுமம் சார்பில் சூரியன் ஃஎப் எம். மற்றும் ரெட் ஃஎப்.எம் என நாட்டின் பல்வேறு இடங்களில் வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தின் மூலம் சன் குழுமம் மேலும் புதிதாக 5 எஃப்.எம்.சேனல்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம், கலாநிதி மாறனின் சன் குழுமத்தின் சார்பு நிறுவனமான தெற்காசிய பண்பலை நிறுவனம்  சூரத், அமிர்தசரஸ், பாட்னா, சண்டிகர் மற்றும் ஜம்முவில் புதிய எஃப்.எம். ரேடியோ அலைவரிசைகளைப் புதிதாக தொடங்க முடியும். தொடர்ந்து இன்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com