பிரபல நடிகை கெளதமி பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள கெளதமி, 'பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றியது த்ரில்லாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.
என்ன காரணத்திற்காக கௌதமி பிரதமரைச் சந்தித்தார் எனத் தெரியவில்லை. அவரது புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு தொடர்பாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.