மு.க.ஸ்டாலினுடன் நாராயணசாமி சந்திப்பு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
மு.க.ஸ்டாலினுடன் நாராயணசாமி சந்திப்பு

சென்னை, 

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

 சென்னை ழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு நாராயணசாமி வெள்ளிக்கிழமை மாலை வந்தார்.  அப்போது, ஸ்டாலினிடம் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்குமாறு ஸ்டாலினிடம் கோரினார்.  இதன்பின்னர், செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியது:-

நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட நவம்பர் 2-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்  தேர்தல் பிரசாரத்துக்கு வருமாறு ஸ்டாலினை அழைப்பு விடுத்தேன். அவரும் வருவதாகக் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளிடமும் ஆதரவு கோரி உள்ளேன்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் குழுக்களை அமைத்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

 குடும்ப அட்டை ஒன்றுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி, ஏழை மக்களுக்கு 100 யூனிட் மின்சாரம், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு செய்துள்ளது. இந்தத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம்.

 மேலும், ரெüடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை, புதுச்சேரி மக்கள் நன்கு அறிவர் என்றார் அவர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com