அரியலூர்: அரியலூர் அருகே லாரியும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.
ஜெயங்கொண்டம் - உடையார்பாளையம் சாலையில் கட்சிப்பெருமாள் கிராமத்தில் லாரி மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மினி லாரியில் வந்துகொண்டிருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 15 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.