திருவனந்தபுரம்: உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார் கேரள ஆளுநர் சதாசிவம்.
இதுதொடர்பாக, அவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நீங்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.
விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலைக்கு திரும்பி, தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.