பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி

இராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள பிரபல கடைவீதியில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதி வெடித்து சிதறிய தாக்குதலில் 7 பேர்

பாக்தாத்: இராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள பிரபல கடைவீதியில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதி வெடித்து சிதறிய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

இராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்கான் பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த சந்தை வளாக பகுதியில் இன்று நுழைந்த பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நிகழ்த்தினர். இதில், 7 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com