தற்போதைய செய்திகள்
மெரீனாவில் மூழ்கிய 2 மாணவர்கள் மாயம்
சென்னை மெரீனாவில் குளித்தபோது நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் மாயமாகினர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை,
சென்னை மெரீனாவில் குளித்தபோது நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் மாயமாகினர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர்கள் ஷாஜகான் (19), நதீல் முகமது (19). கல்லூரி மாணவர்களான இருவரும் சென்னை மெரீனா கடற்கரைக்கு வியாழக்கிழமை மாலை வந்தனர்.
அவர்கள் அங்குள்ள நேதாஜி சிலைக்குப் பின்புறம் உள்ள பகுதியில் குளித்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றனர். இதைப்பார்த்த அருகே இருந்தவர்கள் மாணவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஷாஜகான், நதீல் முகமது ஆகியோர் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்த போலீஸôர் நீரில் மூழ்கிய மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.