ஏப்.9 இல் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டாஸ்மாக் மதபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள், தனியார் விடுதிகளில் உள்ள பார்கள் அனைத்தும் மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூடி வைக்க வேண்டும்.
இதனை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com