கடந்த 10 நாட்களாக நடந்த தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் காப்பீடு கட்டணம் குறைப்பு குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் 50 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து உடனடியாக தங்கள் லாரிகளை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.