மதுரையில் இரு சக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற பெண்ணைத் தாக்கி 11 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதாக புதன்கிழமை புகார் அளிக்கபப்ட்டுள்ளது.
மதுரை கோமதிபுரம் 9-ஆவது தெரு சபரிநகரைச் சேர்ந்தவர் பானுமதி(32). இவர் அண்ணாநகரில் உள்ள தந்தை வீட்டுக்கு, தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றாராம்.
அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பானுமதியின் வாகனத்தின் மீது மோதினராம். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பானுமதியின் கழுத்தில் இருந்த 11 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றனராம்.
சம்பவம் தொடர்பாக பானுமதி அளித்தப் புகாரின்பேரில், அண்ணாநகர் போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.