சென்னை: அண்மையில் காஷ்மீரில் இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இச்சம்பவத்திற்கு நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள கண்டன செய்தியில் கூறியிருப்பதாவது: - இந்தியாவுடன் ஒருங்கிணையுங்கள். பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான இளைஞர்களின் தாக்குதல் வெட்கக்கேடானது.
அஹிம்சையே வீரத்தின் உச்சம். தன்னைத் தாக்கிய இளைஞர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தாமல் அந்த வீரர்கள் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.