தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி பாஜக கட்சியினர் ஆர்பார்ட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக்

மதுராந்தகம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு  செவ்வாய்கிழமை காலை பா.ஜ.க. கட்சியினர் ஆர்பார்ட்டம் செய்தளர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள பூட்டப்பட்ட டாஸ்மாக் கடையின் முன்பு நகர பாஜக கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்பார்ட்டம் செய்தனர். மதுராந்தகம் நகர தலைவர் உத்திரகோட்டி தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, தயாளன்,வேதகிரி, பாலாஜி,குமார். சம்பத் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். இதேபோல மாமண்டூர், எலப்பாக்கம், உள்ளிட்ட பகுதி டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜக கட்சியினர் ஆர்பார்ட்டம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com