மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 17 புள்ளிங்கள் உயர்ந்து 29,336 புள்ளிகளாக உள்ளது.
அதேபோல் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 9,103 புள்ளிகளாகி உள்ளது. காலை வர்த்தக நேர தொடக்கத்தின் போது அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து, ரூ.64.55-ஆக வர்த்தகமானது.
உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததாலும், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்ததன் எதிரொலியாகவும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.