அமைச்சர் தங்கமணி வீட்டில் எடப்பாடி அணியினர் அவசர ஆலோசனை

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். வீட்டில் நடைபெற்றது.

சென்னை:  ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். வீட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் 

நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்தகாக கூறிய தம்பிதுரை, முதல்வராக எடப்பாடியே செயல்படுவார் என்கிறார். முதல்வர் பதவியை தாருங்கள் என்று நாங்கள் கேட்டோமா? எதற்காக கேட்காத ஒரு விஷயத்தை சொல்கிறீர்கள்? நாங்கள் கேட்டது ஒன்று , நீங்க சொல்வது ஒன்று என்று கூறினார்

மேலும் சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30 பேரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை நாங் கள் தயார். சசிகலா, தினகரன் ராஜினாமா கடிதத்தை காட்டினால்தான் பேச்சுவார்த்தை தயார் என ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமி அறிவித்தார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எடப்பாடி அணியில் உள்ளவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இதில், அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com