சென்னை: சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் அண்மையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவும் சசிகலாவும் மருத்துவமனையில் உரையாடிய வீடியோ காட்சிகள் வெளிவந்தால்... அந்த நாள் மிக விரைவில் என பதிவிட்டுள்ளார்.
ஜெயானந்த் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது: கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை... காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள் அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம் இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்...
சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம் ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்
உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக தலைவி சின்னம்மா இருவரும் மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்...? P.H.பாண்டியன், மனோஜ்பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...? அந்த நாள் மிக விரைவில்.... இவ்வாறு ஜெயானந்த் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயானந்த் பதிவிட்டுள்ளதன் அடிப்படையில் அப்பல்லோ ரகசிய வீடியோக்கள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.