மதுரையில் கோயிலில் கூட்டநெரிசலில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலித் திருட்டு

மதுரையில் கோயிலில் கூட்டநெரிசலில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத

மதுரையில் கோயிலில் கூட்டநெரிசலில் பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மதுரை சிந்தாமணியைச் சேர்ந்தவர் பழனிவேல்ராஜன்(36). சம்பவத்தன்று இவர் மனைவியுடன், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள காலபைரவர் கோயிலுக்கு சென்றாராம். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாம்.

இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு இருவரும் கோயிலை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது இவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலி மாயமாகி இருந்ததாம்.

கோயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் சங்கிலியைத் திருடிச்சென்றது தெரிந்ததாம். இதுதாடெர்பாக பழனிவேல்ராஜன் அளித்தப்புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com