சென்னை: அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயில் 3 கம்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது, என தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனத்தில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் எதுவும் தெரியவில்லை.