அரசு இயந்திரம் தொய்வின்றி செயல்பட்டு வருகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் நங்கவள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
அரசு இயந்திரம் தொய்வின்றி செயல்பட்டு வருகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம்: சேலம் நங்கவள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

நங்கவள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு முதல்வர் பழனிசாமி சொட்டு மருந்து வழங்கினார். பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அவர் கூறியதாவது:-  

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர். அரசு இயந்திரம் தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. மேட்டூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

எடப்பாடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தை சுற்றிலும் ரிங் ரோடு அமைக்கப்படும். சேலத்தில் விமான சேவை விரைவில் துவக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com