பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இன்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை திடீரென மாறியது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டித் தீர்த்தது. கிண்டி முதல் கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் தாம்பரம் முதல் பெருங்களத்தூர் வரை செல்லும் சாலையிலும் வாகன செரிசல் ஏற்பட்டுள்ளது.