சென்னை: தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சென்னையில் பல்லாவரம், பொழிச்சலூர், குராம்பேட்டை, சேலையூர், பம்மல், தாம்பரம், செம்பாக்கம், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.