காத்மண்டு, நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக நேபாள நாட்டின் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இவர்களில் ஆறுபேர் சன்சாரி மாவட்டத்திலும், நான்குபேர் சிந்துலி மாவட்டத்திலும், நான்குபேர் பான்கே மாவட்டத்திலும், மோராங் மற்றும் ஜாப்பா மாவட்டத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீசார், ராணுவம் மற்றும் ஆயுத போலீஸ் படை அதிகாரிகளை நேபாள அரசு அனுப்பியுள்ளது.