ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடல்பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை. பெங்காலு நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் 67 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.