சென்னை: அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, அணிகளும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
மேலும் அவர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறியதாவது: - தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும் அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, அணிகளும் இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக செயல்படுகின்றனர். அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது என்று கூறினார். மேலும் எந்தக் கட்சியையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும், அத்தகைய சூழ்நிலையும் உருவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.