தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தயார்: நிர்மலா சீதாராமன்

தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தயார் என மத்திய அமைச்சர்
தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தயார்: நிர்மலா சீதாராமன்

தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தயார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தாம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: - அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ஓராண்டுக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்தியரசு ஒத்துழைக்கு அளிக்க தயார். ஆனால் நிரந்தர விலக்கு என்பது சாத்தியம் இல்லை.

நீட் தேர்வில், தமிழக பாடதிட்டத்தில் 85 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மத்தியரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு தரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com