தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்திரன் கூறியதாவது:-
தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.