ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தில்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மும்பை சென்று அங்கிருந்து சீரடி சென்றார்.

அவருடன் மைத்ரேயன் எம்.பி., செம்மலை, நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். சீரடி சாய்பாபா கோவிலுக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சென்று ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சனீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வழிபட்டார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அணிகள் இணைவது குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், தமிழக மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, சிக்னாபூர் சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com