குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முகுந்த்சந்த் போத்ராவின் வங்கி கணக்குகள் முடக்கம்

கந்து வட்டி கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முகுந்த்சந்த் போத்ராவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முகுந்த்சந்த் போத்ராவின் வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: கந்து வட்டி கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முகுந்த்சந்த் போத்ராவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி புகாரில் நிதி நிறுவனர் போத்ரா மற்றும் அவரது மகன்கள் ககன் மற்றும் சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை 3 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அனுமதி கேட்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கபீர், போத்ரா மற்றும் அவரது மகன்களை ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. முகுந்த்சந்த் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று போத்ரா மற்றும் அவரது மகன்கள் 2 பேரின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடக்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com