திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கருணாநிதி உடன் ராஜாத்தியம்மாள், கனிமொழி, செல்வி, தமிழரசு உள்ளிட்டோர் உள்ளனர்.
மருத்துவமனையில் அவர் ஓரிரு நாட்கள் தங்கி சிகிச்சை மேற்கொள்ளவார் எனக் கூறப்படுகிறது. கருணாநிதி காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது இது 3-வது முறையாகும்.
இதனால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளார்.