நீட் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அரசு அவசர சட்டம் இயற்றியது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவு 14 ல் மத்திய அரசின் 3 துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவசர சட்டவரைவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துளது.
முதலில் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது மேலும் சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வு விலக்கு அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அவசியமில்லை. ஆளுநர் வித்தியாசாகர் ராவ் ஒப்புதல் அளித்தவுடன் நடைமுறைக்கு வரும்.